’அரண்மனை’ 3 பாகங்களில் இருந்த அதே பேய், அதே மிரட்டல்.. ‘அரண்மனை 4’ டிரைலர்..!

Mahendran

சனி, 30 மார்ச் 2024 (17:32 IST)
சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை படத்தின் மூன்று பாகங்கள் பேய் கதையாக இருந்த நிலையில் தற்போது நான்காம் பாகம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகிய நிலையில் கடந்த மூன்று பாகங்களில் இருந்த அதே கிராபிக்ஸ், அதே மிரட்டல் ஆகியவை இந்த படத்திலும் இருக்கும் என்பது இன்று வெளியாகி உள்ள ட்ரெய்லரில் இருந்து தெரிய வருகிறது.  

சுந்தர் சி, தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையில் உருவாகிய இந்த படத்தின் டிரைலரை மிரட்டும் வகையில் உள்ளது. சுந்தர் சி தங்கையாக தமன்னா நடித்திருக்கும் நிலையில் அவர் மர்மமான முறையில் மரணம் அடைந்து விடுகிறார். அவரது மரணத்திற்கு என்ன காரணம் என்று சுந்தர் சி ஒரு பக்கம் துப்பறிந்து கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் தமன்னா பேயாக வந்து தன்னை கொன்றவர்களை பழிவாங்குகிறார்.

இதனை அடுத்து  கொலைகாரன் யார்? அவர்களை சுந்தர் சி எப்படி பிடிக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என்று தெரிய வருகிறது. அட்டகாசமான கிராபிக்ஸ் காட்சிகள், தமன்னா மற்றும் ராஷி கண்ணாவின் கிளாமர் காட்சிகள், யோகி பாபு மற்றும் விடிவி கணேஷ் காமெடி காட்சிகள் என படம் முழுவதும் ஒரு வெற்றி படத்திற்கு தேவையானவை இருப்பதாக ட்ரைலரிலிருந்து தெரிய வருகிறது.

Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்