தொடர்ங்கியது தலைநகரம் 2… ஷூட்டிங் ஸ்பாட்டில் பிறந்தநாள் கொண்டாடிய இயக்குனர்!

சனி, 22 ஜனவரி 2022 (15:49 IST)
இயக்குனர் சுந்தர் சி நடிப்பில் 2006 ஆம் ஆண்டு உருவான தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகி வருகிறது.

2006 ஆம் ஆண்டு இயக்குனர் அவதாரத்தில் இருந்து நடிகர் அவதாரம் எடுத்த சுந்தர் சி யின் முதல் படமான தலைநகரம் வெளியானது. வடிவேலுவின் நகைச்சுவை காட்சிகள் மிகப்பெரிய ப்ளஸ் பாய்ண்ட்டாக இந்த படத்துக்கு அமைய படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து சுந்தர் சி வரிசையாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

ஒரு கட்டத்தில் படங்கள் தோல்வி அடையவே மீண்டும் இயக்குனரானார். இப்போது அவர் இயக்கும் படங்கள் தோல்வி அடைவதால் நடிப்பு, இயக்கம் என பயணித்து வருகிறார். இந்நிலையில் இப்போது தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகத்தில் வி இசட் துரை இயக்கத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் அவர் நேற்று தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்