யார் இந்த சுல்தான்? ஹீரோயின் லீக் செய்த போட்டோவால் அப்செட்டான கார்த்தி!!

சனி, 17 ஆகஸ்ட் 2019 (15:49 IST)
நடிகை ராஷ்மிகா மந்தனா கார்த்தி படம் குறித்த தகவலை வெளியிட்டதால் படக்குழு அதிருப்தியில் உள்ளனர். 
 
கன்னட நடிகையான ராஷ்மிகா தெலுங்கு படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து தற்போது நடிகர் காத்தியுடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். 
 
பாக்யராஜ் கண்ணன் இயக்ககும் இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் S R பிரபு தயாரிக்கிறார். நெப்போலியன், யோகி பாபு, சதீஸ், மலையாள நடிகர் லால் ஆகியோர் இப்படத்தில் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு விவேக் மெரிவீன் இசையமைக்கிறார். 
 
இதை தவிர்த்து படம் குறித்து எந்த ஒரு தகவலும் வெளிவராத நிலையில் நடிகை ராஷ்மிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சுல்தான் பட ஷூட்டிங்க்கில் 4 ஆம் நாள் எனக் குறிப்பிட்டு ஒரு போட்டோவை பதிவிட்டார். 
இதனால் படத்தின் பெயர் சுல்தான் என செய்திகள் பரவி வருகிறது. அதேபோல் கார்த்தி பெயரும் சுல்தானாக இருக்க கூடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. ராஷ்மிகாவின் இந்த காரியத்தால் ஜிரோ, இயக்குனர் படக்குழு என அனைவரும் அப்செட்டாகியுள்ளனர். 
 
ராஷ்மிகா அந்த புகைப்படத்தை டெலிட் செய்த போது அது வைரலாகி வருகிறது. தனது தவறுக்கு ராஷ்மிகா மன்னிப்பு கேட்டுள்ளார் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்