கம்பி எண்ணப்போகும் நடிகை ஸ்ரீ ரெட்டி....? ஆப்பு வைத்த காமெடி நடிகர்!

சனி, 22 பிப்ரவரி 2020 (09:38 IST)
தெலுங்கு சினிமாவின் சர்ச்சை நடிகையான ஸ்ரீ ரெட்டி பட வாய்ப்புக்காக தன்னை பல நடிகர்கள் இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் என பலரும் தன்னை தவறாக பயன்படுத்திக்கொண்டு ஏற்மற்றிவிட்டதாக பல முன்னணி பிரபலங்களின் பெயரை வெளியிட்டு நிர்வாண போராட்டம் நடத்தி சர்ச்சையை கிளப்பி பிரபலமானார்.
 
இதையடுத்து சென்னையில் குடியேறிய ஸ்ரீ ரெட்டி அடிக்கடி சர்ச்சையான விஷயங்களை பதிவிட்டு சம்மந்தப்பட்டவரை கதிகலங்க வைத்திடுவார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இயக்குனர் முருகதாஸ், ஸ்ரீகாந்த், விஷால் உள்ளிட்ட பலரை பற்றியும் அதிர்ச்சி தகவல்களை பதிவிட்டுள்ளார். மேலும் அண்மையில் கூட தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் குறித்து அவதூறு பேசி பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தார். இப்படி திரையுலகில் பல முன்னணி பிரபலங்கள்  மீது தொடர்ந்து குற்ற சாட்டுகளை வைத்து வந்த  நடிகை ஸ்ரீ ரெட்டி மீது இதுவரை யாரும் ஆக்ஷன் எடுக்கவில்லை. 

இதுவே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது முதன் முறையாக தெலுங்கு துணை நடிகை கராத்தே கல்யாணி மற்றும் நடன இயக்குனர் ராகேஷ் ஆகியோர் சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரில் ஸ்ரீரெட்டி தங்களை  ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியுள்ளதாக வீடியோ ஆதாரத்துடன் காண்பித்து புகார் கொடுள்ளனர். இதையடுத்து போலீசார் ஸ்ரீ ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எனவே கூடிய விரை  ஸ்ரீரெட்டி கைது செய்யப்பட வாய்ப்புகள் உள்ளது என டோலிவுட் சினிமா வட்டாரம் கூறி வருகிறது.  

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்