உடலுறவுக்கு பின் உணவு கூட கொடுக்கவில்லை : ஸ்ரீரெட்டி கண்ணீர்

செவ்வாய், 24 ஜூலை 2018 (10:33 IST)
தன்னை படுக்கையில் பயன்படுத்திய திரையுலகினர் தன்னை வெறுங்கையோடு அனுப்பினார்கள் என நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார்.

 
முருகதாஸ், ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த், சுந்தர் சி. உள்ளிட்ட தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட பிரபலங்கள் சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி சிலர் தன்னை படுக்கையில் பயன்படுத்திவிட்டு ஏமாற்றி விட்டதாக நடிகை ஸ்ரீரெட்டி புகார் கூறியுள்ளார். அதோடு, தொடர்ச்சியாக தொலைக்காட்சி பேட்டிகளில் பல பரபரப்பு தகவல்களை கூறி வருகிறார். 
 
அந்நிலையில், இயக்குனர் வாராகி என்பவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் அளித்துள்ளர். அதில், நடிகை ஸ்ரீரெட்டி தன்னை திரைத்துறையை சேர்ந்த பலர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களிடம் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும், இவரே சம்மதித்து பலரிடம் படுக்கையை பகிர்ந்து கொண்டதாக கூறியுள்ள இவர் மீது விபச்சார பிரிவின் கீழும், மிரட்டி பணம் பறிக்கும் பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். இது ஸ்ரீரெட்டிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில், தனது ஸ்ரீரெட்டி தனது முகநூல் பக்கத்தில் “நான்  மிகவும் வருத்தத்துடன் இருக்கிறேன். எனக்கு இது பழக்கப்பட்டதுதான். பட புரமோஷனுக்காக இதை செய்துள்ளீர்கள். ஒரு பெண் தாங்கிக்கொள்ள முடியாத புகாரை என் மீது சுமத்துகிறீர்கள். நான் ஒருவரிடமிருந்தும் ஒரு பைசா பணம் கூட பெறவில்லை. உங்களை மறக்க மாட்டேன். நான் யாரையாவது மிரட்டி பணம் பறித்தேன் என்பதற்கான ஆதாரத்தை கொடுத்துவிட்டு, என் தலையை வெட்டி விடுங்கள். படுக்கையை பகிறும் விபச்சாரிகள் கூட பணத்தை பெறுவார்கள். ஆனால், என்னுடன் உடலுறவு வைத்துவிட்டு உணவு கூட வழங்காமல் என்னை வெறும் வயிற்றோடு அனுப்பினர். நான் நடிகர் சங்கத்தின் அப்பாயின்மெண்டுக்காக காத்திருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்