இந்த படத்தில் வக்கீல் தொழிலை பற்றியும், வக்கீலை பற்றியும் அவதூறான வார்த்தைகளில் வசனங்களும், காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. எனவே, இந்த படத்தின் தயாரிப்பாளர்கள் தனுஷ், வெற்றிமாறன், இயக்குனர் மணிகண்டன், அவதூறு காட்சியில் நடித்துள்ள நடிகை ஐஸ்வர்யா ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, தனுஷ், வெற்றிமாறன் உள்பட 4 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறி அவர்களுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.