அடிக்கடி ஒரு இயக்குனரின் வீட்டுக்கு சென்று நலம் விசாரிக்கும் சிவகார்த்திகேயன்! ஏன் தெரியுமா?

சனி, 1 மே 2021 (19:54 IST)
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனரோடு சிவகார்த்திகேயன் இப்போது மிகவும் நெருக்கமாக பழகி வருவதாக சொல்லப்படுகிறது.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டும் இல்லாமல் தமிழ் சினிமா கதாநாயகர்களின் கவனத்தையும் ஈர்த்தவர் தேசிங் பெரியசாமி. அந்த படத்தை பார்த்துவிட்டு ரஜினியே அவரை அழைத்து எனக்கும் ஏதாவது கதை யோசிங்க எனக் கூறிய ஆடியோ கூட வெளியானது. இந்நிலையில் அவரின் அடுத்த படத்தில் எப்படியாவது நடித்துவிட  வேண்டுமென சிவகார்த்திகேயன் ஆவலாக இருக்கிறாராம். இது சம்மந்தமாக அவரிடம் பேச்சுவார்த்தையும் நடத்தி அடிக்கடி அவர் வீட்டுக்கே சென்று நலம் விசாரித்தும் வருகிறாராம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்