சிவகார்த்திகேயனின் அடுத்த பட டைட்டில் அறிவிப்பு

புதன், 26 செப்டம்பர் 2018 (11:10 IST)
சிவகார்த்திகேயன் நடித்த 'சீமராஜா' சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது அவர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படமும், 'இன்று நேற்று நாளை' பட இயக்குனர் ரவிகுமார் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் விரைவில் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படம் ஒன்றில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். பிரபல இயக்குனர் திரு இயக்கிய இந்த குறும்படம் ஐந்து நிமிடங்கள் ஓடக்கூடியது. தானும் ஒரு பெண் குழந்தையின் தந்தை என்பதால் இந்த குறும்படத்தில் நடிக்க அவர் ஒரு பைசா கூட சம்பளம் வேண்டாம் என்று கூறிவிட்டதாக இந்த குறும்படத்தின் தயாரிப்பாளர்கள்  ராகினி மகேந்திரன் மற்றும் அரசி அருள் ஆகியோர் கூறியுள்ளனர்.

'மோதி விளையாடு பாப்பா' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த குறும்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் உள்ள பள்ளியில் நடந்ததாகவும், இந்த படப்பிடிப்பில் சிவகார்த்திகேயனுடன் 40 பெண் குழந்தைகளும் நடித்துள்ளதாகவும் இயக்குனர் திரு தெரிவித்துள்ளார். இந்த படத்தின் எடிட்டிங் மற்றும் பின்னணி இசை பணிகள் நடந்து வருவதாகவும் மிக விரைவில் இந்த குறும்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்