தமிழில் தயாராகிற அனைத்துப் படங்களுமே மசாலாப் படங்கள்தான். என்ன ஒன்று, ஒரு படத்தில் மசாலா தூக்கலாக இருக்கும், சிலவற்றில் மசாலா மட்டுமே இருக்கும். இதுதான் வித்தியாசம். இப்போது மசாலா படம் என்றே ஒரு படத்தை எடுக்கிறார்கள்.
இணையத்தில் நம் கேபிள் சங்கர் மாதிரி படங்களை விமர்சிக்கிறேன் என்று உப்புக் கண்டம் போடும் விமர்சகர் ஒருவரை, நான் பணம் தர்றேன். நீ சொல்ற நல்ல படத்தை எடுத்து காமி என்கிறார் ஒரு தில் தயாரிப்பாளர். தமிழ் சினிமாவை கரைத்து குடித்த அந்த விமர்சகர் எந்த மாதிரியான கதையை தேர்வு செய்கிறார், படத்தை எடுக்கிறார் என்பதுதான் கதை.