கத்தி ரீமேக் சிரஞ்சீவியின் 150 -வது படமா? - சீறிய இயக்குனர்

செவ்வாய், 26 ஜூலை 2016 (15:43 IST)
தனது 150 -வது படத்தின் கதைக்காக பல வருடங்கள் காத்திருந்த சிரஞ்சீவி கடைசியில் தமிழில் முருகதாஸ் இயக்கிய கத்தி படத்தின் ரீமேக்கில் நடிப்பது என்று முடிவு செய்தார்.


 


இது ஆந்திரா ரசிகர்களையும், சிரஞ்சீவியின் நலம் விரும்பிகளையும் ஆச்சரியப்படுத்தியது. கத்தி அப்படியொன்றும் கமர்ஷியல் கதையல்ல என்பது அவர்கள் எண்ணம்.
 
இயக்குனர் கொண்டன்தரமி ரெட்டி இதனை வெளிப்படையாக விமர்சித்தார். சிரஞ்சீவி இன்னும் கொஞ்சம் கமர்ஷியலான கதையை தேர்வு செய்திருக்கலாம் என்று அவர் கூற, சிரஞ்சீவியின் ரசிகர்கள் அவர் மீது பாய்ந்து குதறிவிட்டனர். சூப்பர் ஸ்டார்கள் தவறே செய்தாலும் தட்டி கேட்கக் கூடாது என்ற மனநிலை ஆந்திராவிலும் இருக்கிறது போலும். 
 
ரசிகர்களின் கண்டனத்தைத் தொடர்ந்து ரெட்டி மன்னிப்பு கேட்டார். அதன் பிறகே பிரச்சனை முடிவுக்கு வந்தது.
 
ஆமாம்... சிரஞ்சீவியின் நாயகி யார் என்பதை முடிவு செய்துவிட்டீர்களா?

வெப்துனியாவைப் படிக்கவும்