அரவிந்தசாமியின் அடுத்த படத்தில் சிம்ரன்

புதன், 22 பிப்ரவரி 2017 (22:32 IST)
'தனி ஒருவன்' படத்தின் மூலம் ரீஎண்ட்ரி ஆன நடிகர் அரவிந்தசாமி தற்போது ஒரே நேரத்தில் நான்கு படங்களில் நடித்து பிசியான நடிகர்களில் ஒருவராக விளங்கி வருகிறார்



இவற்றில் ஒன்று 'வணங்காமுடி'. 20 வருடங்களுக்கு முன் அரவிந்தசாமி நடித்த 'புதையல்' படத்தை இயக்கிய் செல்வா தான் இந்த படத்தை இயக்குகிறார்.

இந்த படத்தில் அரவிந்தசாமிக்கு ஜோடியாக ரித்திகாசிங் மற்றும் முக்கிய வேடத்தில் நந்திதா ஸ்வேதா நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்தில் நடிகை சிம்ரன் போலீஸ் கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் இதற்கான ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

டி. இமான் இசையமைக்கிறார். இந்த படத்தை மேஜிக் பாக்ஸ் நிறுவனத்தின் சார்பில் கணேஷ் தயாரிக்கவுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்