மாநாடு ஷூட்டிங் எப்போது? தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பதில்!

புதன், 7 அக்டோபர் 2020 (09:56 IST)
நடிகர் சிம்புவை வைத்து மாநாடு படத்தைத் தயாரித்து வரும் சுரேஷ் காமாட்சி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் எப்போது தொடங்கும் என பதிலளித்துள்ளார்.

நடிகர் சிம்பு லாக்டவுனுக்கு முன்னதாக வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தில் கவனம் செலுத்தி வந்தார். பின்னர் லாக்டவுன் முடிந்து தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாநாடு படத்தில் மீண்டும் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் இப்போது சுசீந்தரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் மாநாடு படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என கேள்வி எழுந்தது. அது சம்மந்தமாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது முகநூல் பக்கத்தில் ’தடைகள் உடைந்து… கொரோனா பாதிப்புகள் கடந்து #மாநாடு நவம்பர் முதல் வாரம் படப்பிடிப்பை தொடங்குகிறோம்’ என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்