மார்ச் 2 ஆரம்பமாகும் கௌதம் - சிம்பு படம்

புதன், 25 பிப்ரவரி 2015 (14:53 IST)
என்னை அறிந்தால் ஆரம்பிக்கும் முன் கௌதம் சிம்புவை வைத்து ஒரு படத்தை ஆரம்பித்தார். படத்துக்கு சட்டென்று மாறுது வானிலை என பெயரும் வைத்தனர்.
 

 
துருவநட்சத்திரம் ட்ராப்பானதும் என்ன செய்வது என்று புரியாத கௌதம் முதலில் தொடர்பு கொண்டது சிம்புவை. நாம ஒரு படம் பண்ணலாமா என்று கேட்டதற்கு சிம்பு சொன்ன பதில், எப்போ ஷுட்டிங்ன்னு மட்டும் சொல்லுங்க. இந்த உரையாடல் நடந்ததுக்கு மறுநாள் படப்பிடிப்பு தொடங்கியது.
 
இதனிடையில் என்னை அறிந்தால் வாய்ப்பு வந்ததால் சிம்பு படம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு வரும் மார்ச் 2 மீண்டும் தொடங்க உள்ளனர். சட்டென்று மாறுது வானிலை பெயரை வேறொருவர் பதிவு செய்து வைத்திருப்பதால் வேறு பெயரை பரிசீலனை செய்து வருகின்றனர்.
 
பல்லவி சுபாஷ் ஹீரோயினாக நடிக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்