இந்நிலையில், சிம்புவைச் சீண்டும் வகையில் ஒரு பதிலைக் கூறியுள்ளார் கஸ்தூரி. ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தின் தோல்வி குறித்து ட்விட்டரில் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த கஸ்தூரி, “அவர் தொழிலையே மாற்றும் நிலை உருவாகியிருக்கிறது” என்று கூறியிருக்கிறார். ‘அடுத்த சூப்பர் ஸ்டார்’ என்ற கனவில், சின்ன வயதிலேயே ‘லிட்டில் சூப்பர் ஸ்டார்’ என்று கூறிக்கொண்டு வந்தவர் சிம்பு. முழுநேரமும் சினிமாவில் இருப்பவரைப் போய் கஸ்தூரி இப்படிச் சொன்னது, சிம்பு ரசிகர்களைக் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. இத்தனைக்கும் அந்தப் படத்தில் கஸ்தூரியும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.