சிம்பு மற்றும் அனிருத்தின் ’பீப் பாடல்’ - கலாய்கும் நெட்டிசன்கள்

வியாழன், 17 டிசம்பர் 2015 (15:25 IST)
நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இணைந்து வெளியிட்டுள்ள ’பீப்’ பாடல் குறித்து நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
 

 
நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இணைந்து வெளியிட்ட ’பீப்’ பாடல் சில நாட்களாக இணையதளங்களில் பரவி வருகிறது. இது தமிழக மக்களிடையேயும், பெண்களிடையேயும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை, புதுகை, கோவை, சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதிலும் இருவருக்கும் எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
 

 
இதற்கிடையில், இவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில், கோவை மாநகர ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டதன் பேரில், கோவை காவல் நிலையத்தில் மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

 
பெண்களை ஆபாசமாக சித்தரிப்பதற்கு எதிரான சட்டப் பிரிவு (4), பெண்களை இழிவுபடுத்துவதற்கு எதிரான சட்டம் (509), தகவல் தொழில்நுட்பச் சட்டம் (67) ஆகிய ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

 
இந்நிலையில்,  ’பீப்’ பாடல் குறித்து நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றனர்.


 
மேலும் அடுத்தப் பக்கம்..
 
















வெப்துனியாவைப் படிக்கவும்