சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வந்த நடிகர் சித்தார்த் தற்போது கடலூரில் முகாமிட்டுள்ளார். நேற்று கடலூரில் வெள்ளம் பாதித்த 15 கிராமங்களை அவர் நேரில் பார்வையிட்டார். அதன் பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர்,
சென்னையிலுள்ள சித்தார்த்தின் வீடு, மூன்று கார்கள் மற்றும் ஸ்டுடியோக்கள் நீரில் மூழ்கிவிட்டன. 'ஒரேநாளில் அனைத்தையும் இழந்த நடுத்தர மக்களுக்காக வருந்துவதாகவும், முதல்முறையாக பாதிக்கப்பட்டவர்களை விட உதவிக்கரங்கள் நீட்டுபவர்கள் அதிகம் உள்ளனர்' எனவும் அவர் கூறினார்.