ஆறே நாட்களில் ரூ.100 கோடி. சூர்யாவின் 'எஸ் 3' செய்த சாதனை

புதன், 15 பிப்ரவரி 2017 (22:10 IST)
பிரபல இயக்குனர் ஹரி இயக்கத்தில் சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் நடித்த 'எஸ் 3' திரைப்படம் கடந்த 9ஆம் தேதி வெளிவந்து வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது.



இந்நிலையில் இந்த படம் ஆறே நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் அறிவித்துள்ளது.

சென்னையில் மட்டும் இந்த படம் 4 நாட்களில் ரூ.2.4 கோடி வசூல் செய்துள்ளதாகவும், தமிழகத்தை விட ஆந்திர, தெலுங்கானா மாநிலங்களில் இந்த படத்தின் வசூல் அதிகம் என்றும் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் வெளிநாடுகளில் திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளில் இந்த படம் சாதனை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்னும் நான்கு வருடங்கள் கழித்து சிங்கம் படத்தின் நான்காம் பாகம் வெளிவரும் என்று சூர்யா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்