2003-இல் தெலுங்கில் வெளியாகி பட்டைய கிளப்பிய படம் ஒக்கடு. ஒருவன் என்று அர்த்தம். மகேஷ்பாபு நடிப்பில் குணசேகர் இயக்கிய இந்தப் படத்தை தரணி கில்லி என்ற பெயரில் தமிழில் இயக்கினார். அதன் பிறகு நடந்தது நாடறியும். விஜய்யின் சினிமா சரித்திரத்தில் இன்றும் கில்லிதான் மைல்கல்.