கொரோனா பேரிடர் நிதி… இயக்குனர் ஷங்கர் 10 லட்சம் நன்கொடை!

சனி, 15 மே 2021 (17:02 IST)
கொரோனா கால பேரிடர் நிதியாக இயக்குனர் ஷங்கர் 10 லட்சம் ரூபாய் அளித்துள்ளார்.

கொரோனா பேரிடரை சந்திக்க தமிழக முதல்வர் பொதுமக்களிடம் இருந்து நன்கொடை கேட்டு வேண்டுகோள் விடுத்திருந்தார்.இதையடுத்து பொதுமக்கள் பலரும் தங்களால் இயன்றதை முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளித்து வருகின்றனர். அதுபோல பிரபலங்களும் கொரோனா நிவாரண நிதி அளித்துள்ளனர். முன்னதாக சூர்யா குடும்பத்தினர் 1 கோடியும், அஜித் 25 லட்சமும் அளித்திருந்தனர்.

அந்த வகையில் தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இப்போது 10 லட்ச ரூபாயை கொரோனா பேரிடர் நிதியாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்