சேதுபதியும் மதுரைக்கதைதான்

புதன், 20 ஜனவரி 2016 (14:01 IST)
அருண்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் சேதுபதி விரைவில் திரைக்கு வருகிறது. 


 
 
இந்தப் படத்தில் சேதுபதி என்கிற போலீஸ் அதிகாரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஒரு போலீஸ் அதிகாரியின் வேலையையும், அவரது குடும்பத்தையும் பற்றிய கதையிது என்றார் அருண்குமார்.
 
அருண்குமார் மதுரையைச் சேர்ந்தவர் என்பதால் மதுரை கதைக்களத்தில் படத்தை எடுத்துள்ளார். அதற்காக மதுரை பின்னணியை கொண்ட படங்களில் இடம்பெறும் பறந்து பறந்து சண்டையோ, அரிவாள் கலாச்சாரமோ இந்தப் படத்தில் இருக்காது என உத்தரவாதமளித்துள்ளார். இதுவரை வந்துள்ள போலீஸ் கதைகளிலிருந்து இது முற்றிலும் மாறுபட்டிருக்கும் என்றும் தெரிவித்தார்.
 
பண்ணையாரும் பத்மினியும் படத்தை தந்தவர் என்பதால் அருண் குமாரின் வார்த்தையை நம்பலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்