மீண்டும் 'சேதுபதி 2' : கம்பீரமாக வேட்டையாட வர்றாரு விஜய் சேதுபதி

செவ்வாய், 12 மார்ச் 2019 (10:59 IST)
பண்ணையாரும் பத்மினியும் படத்தை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் 'சேதுபதி' படத்தில் விஜய் சேதுபதி நடித்து இருந்தார்.


 
கம்பீரமான போலீஸ் அதிகாரி வேடத்தில் மாஸ் ஹீரோவாக விஜய் சேதுபதி நடித்து இருந்தார். இந்தப் படம்  சூப்பர் ஹிட்டாக ஓடியது. சேதுபதி படம், விஜய் சேதுபதியை  கமர்சிஷயல் ஹிட் நாயகனாக மாற்றியது. இந்நிலையில்  தற்போது சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி 'மாமனிதன்' படத்தில் நடித்த முடித்துவிட்டார். இதேபோல் அரவாணி வேடத்தில் 'சூப்பர் டீலக்ஸ்' படத்திலும்  நடித்து முடித்துவிட்டார். சேதுபதி படத்தை இயக்கிய அருண்குமார் இயக்கத்தில் சிந்துபாத்  படத்திலும் நடித்து முடித்துவிட்டார்.  அவர் தற்போது கடைசி மனிதன் படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அருண் குமார் இயக்கத்தில் மீண்டும் சேதுபதி இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதுபற்றி விஜய் சேதுபதி அல்லது இயக்குனர் அருண்குமார் பதில் அளித்தால் உண்மையா என்பது தெரிந்துவிடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்