ரஜினியுடன் எடுத்த செல்ஃபியை ட்விட்டரில் பகிர்ந்த மலேசிய பிரதமர் நஜிப் ரஸாக்!

வெள்ளி, 31 மார்ச் 2017 (15:20 IST)
இந்தியாவுக்கு 5 நாட்கள் பயணமாக வந்துள்ள மலேசிய பிரதமர் நஜிப் ரஸாக், இன்று காலை நடிகர் ரஜினிகாந்தை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இன்று காலை 10:30 மணியளவில் ரஜினியின் போயஸ் தோட்ட இல்லத்துக்கு நஜிப் ரசாக் அவரது மனைவியும் வந்தனர். அவர்களை ரஜினிகாந்த் வரவேற்றார்.

 
மலேசிய பிரதமர் நஜிப் ரஸாக் தாங்கள் எந்த அளவுக்கு ரசிகர்கள் என்பதையெல்லாம் ரஜினியிடம் கூறினர். இது ஒரு  நல்லிணக்க சந்திப்பு என்று ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறினார். இந்த சந்திப்பின்போது ரஜினியுடன் ஏகப்பட்ட செல்ஃபி  எடுத்துக் கொண்ட மலேசிய பிரதமர் நஜிப் ரஸாக், அந்த படங்களில் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு தனது  மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.


 
 
அதில் தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினியுடனான இனிய நட்பு ரீதியான சந்திப்பு இப்போது நடந்து முடிந்தது," என்று தெரிவித்துள்ளார்



வெப்துனியாவைப் படிக்கவும்