நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் அதீத சம்பளத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற குரல் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. மதுரை, ராமநாதபுரம் விநியோகஸ்தர்கள் சங்க கூட்டத்திலும் இது குறித்து விவாதிக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெரிய படங்களால் விநியோகஸ்தர்களுக்கு நஷ்டமே ஏற்படுகிறது. 50 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளத்தில் 25 சதவீதத்தை பிடித்துவிட்டே தயாரிப்பாளர்கள் படத்தை வெளியிட வேண்டும். படம் லாபம் சம்பாதித்தால் 25 சதவீதத்தை அவர்களுக்கு தரலாம். நஷ்டமடைந்தால் அந்தப் பணத்தை தரத்தேவையில்லை. அந்தப் பணத்தை திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களுக்கு தயாரிப்பாளர் பிரித்து தரவேண்டும் என்று கோரிக்கை முன் வைக்கப்பட்டது.