பிச்சைக்காரன் நாயகிக்கு ரகசிய திருமணம்

செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (14:34 IST)
பிச்சைக்காரன் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமான சாத்னா டைட்டஸ், தொழிலதிபரை திருமணம் செய்துகொண்ட செய்தி கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


 
 
டைரக்டர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த படம் ‘பிச்சைக்காரன்’. இதில் கதாநாயகியாக சாத்னா டைட்டஸ் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு என இரு மொழியிலும் வெளியான ‘பிச்சைக்காரன்’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்ட ஒரு பட நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவர்தான் கார்த்தி.
 
இவர் ‘பிச்சைக்காரன்’ படவிழா தொடர்பாக அடிக்கடி சாத்னா டைட்டசை சந்தித்து பேசினார். அப்போது, இருவருக்கும் காதலிக்க தொடங்கினார்கள். இவர்கள் காதலுக்கு இருவீட்டிலும் எதிர்ப்பு எழுந்தது. இந்த நிலையில், சமீபத்தில் சாத்னா டைட்டசும், கார்த்தியும் முறைப்படி பதிவு திருமணம் செய்து கொண்டனர்.
 
திருமணம் குறித்து சாத்னா டைட்டசை மணந்துள்ள கார்த்தி  ’நாங்கள் இருவரும் முறைப்படி பதிவு திருமணம் செய்து கொண்டிருக்கிறோம். திருமணத்துக்குப் பிறகு படங்களில் நடிப்பதை சாத்னா குறைத்து இருக்கிறார். இது நாங்கள் இரண்டு பேரும் எடுத்த முடிவு. விரைவில் ஊர் அறிய திருமணம் நடக்கும். அதன் பிறகு சாத்னா படங்களில் நடிக்க மாட்டார். இல்லற வாழ்வை மட்டும் கவனிப்பார்’ என கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்