சமுத்திரக்கனி இயக்கத்தில் மீண்டும் சசிகுமார்...

புதன், 5 ஜூலை 2017 (17:29 IST)
சமுத்திரக்கனி இயக்கவுள்ள புதிய படத்தில், சசிகுமார் ஹீரோவாக நடிக்கிறார்.


 

 
‘சுப்ரமணியபுரம்’ என்ற சிறப்பான படத்தை இயக்கிய சசிகுமார், தற்போது ஹீரோவாக நடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். ‘நாடோடிகள்’, ‘போராளி’ என இரண்டு படங்களைத் தொடர்ந்து, சசிகுமார் நடிப்பில் மூன்றாவது படத்தை இயக்கப் போகிறார் சமுத்திரக்கனி. இந்தப் படம், தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவிருக்கிறது.
 
தமிழில் சசிகுமாரும், தெலுங்கில் நானியும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர். எப்போதும் தன்னுடைய படங்களில் சமூகக் கருத்தைச் சொல்லும் சமுத்திரக்கனி, இந்தப் படத்திலும் முக்கியமான ஒரு கருத்தைச் சொல்லப் போகிறார். தற்போது முத்தையா இயக்கத்தில் நடித்துவரும் சசிகுமார், அந்தப் படத்தைத் தொடர்ந்து இதில் நடிக்கிறார். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்