அதன் பின், நடிகர் ரஜினியை வைத்து ரஞ்சித் இயக்கிய கபாலி படத்திற்கும் அவரே இசையமைத்தார். இப்படத்தின் இடம்பெற்ற நெருப்புடா, மாயநதியிலே உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன.
அடுத்து, நடிகர் தனுஷ் தயாரிப்பில், பா. ரஞ்சித் இயக்கும் படத்தில் ரஜினி நடிக்கிறார். இது ரஜினிக்கு 161வது படமாகும். அப்படத்திற்கான வேலையில் ரஞ்சித் மும்முரமாக ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், இந்த படத்திற்கும் சந்தோஷ் நாராயணனே இசையமைக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது.