சந்தானம் & யோகிபாபு கூட்டணியில் டகால்டி !

சனி, 4 மே 2019 (13:47 IST)
தமிழ் சினிமாவின் முன்னனி நகைச்சுவை நடிகர்களான சந்தானமும் யோகி பாபுவும் டகால்டி படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகர்கள் வரிசையில் சந்தானம் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருந்த நேரத்தில் அவருக்கு ஹீரோ ஆசை வந்தது. அதனால் காமெடியனாக நடிப்பதில் இருந்து ஒதுங்க ஆரம்பித்தார். இதனால் காலியாக இருந்த காமெடியன் இடத்தை சூரி சில காலம் நிரப்பினார்.

ஆனால் அவராலும் தொடர்ந்து தாக்குப் பிடிக்க முடியாத நிலையில் இப்போது பிஸியான காமெடியனாக யோகி பாபு நடித்துக் கொண்டிருக்கிறார். வாரத்துக்கு ஒரு வெள்ளிக்கிழமை வருகிறதோ இல்லையா யோகி பாபு நடித்தப் படம் ஒன்று வெளியாகிக் கொண்டிருக்கிறது. தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார்களான ரஜினி, விஜய், அஜித் என அனைவரின் படங்களிலும் வரிசையாக நடித்துவரும் யோகிபாபு தனக்கு முன்னால் தான் இருந்த இடத்தில் இருந்த சந்தானத்தோடு கைக்கோர்த்துள்ளார்.

இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனர் விஜய் ஆனந்த் இயக்கியுள்ள இந்தப்படம் படப்பிடிப்பு முடிந்து விரைவில் வெளியாக இருக்கிறது. இரண்டு முன்னணி கதாநாயகர்கள் நடித்திருப்பதால் இந்தப் படம் பெரிதும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்