கிட்ணா என்ற படத்தை சமுத்திரகனி எடுக்கயிருப்பதாக அறிவித்து பல மாதங்கள் ஆகிறது. சமுத்திரகனியும், அமலா பாலும் முக்கிய வேடத்தில் நடிக்க மலைவாழ் மக்களின் வாழ்க்கையை கிட்ணாவில் காட்சிப்படுத்தயிருப்பதாக செய்திகள் வெளியாயின.
நான்கு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தில் தமிழ், மலையாளத்தில் சமுத்திரகனியும், தெலுங்கு, கன்னடத்தில் கிஷேnரும் நடிக்கிறார்கள். தன்ஷிகா நான்கு மொழிகளிலும் நடிக்கிறார்.
கிட்ணாவை சமுத்திரகனி இரண்டுவிதமாக எடுக்கயிருப்பதாக அறிவித்துள்ளார். இரண்டேகால் மணிநேரம் ஓடக் கூடியதாகவும், மூன்று மணிநேரம் ஓடக் கூடியதாகவும் கிட்ணா தயாராகிறது. மூன்று மணிநேரம் ஓடக்கூடிய படத்தை கான் திரைப்பட விழாவுக்கு விருதுப் போட்டிக்கு அனுப்பவுள்ளார். இரண்டேகால் மணிநேரப் படம் பொதுவான பார்வையாளர்களுக்கு.