இந்நிலையில், சில மாதங்களுக்கு தெலுங்கானா மாநிலத்தின் கைத்தறி துணிகளின் தூதராக சமந்தா நியமிக்கப்பட்டார். இது ஒரு கௌரவமாக இருந்தாலும், இந்த விஷயம் தற்போது சமந்தாவை சிக்கலில் சிக்கவைத்துள்ளது.
இது ஒரு புறம் இருக்க, தெலுங்கானா மாநிலத்தின் எதிர்கட்சிகள் சமந்தாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தெலுங்கானாவில் பிறந்த ஒரு பெண்ணை மாநிலத்தின் கைத்தறி துணிகளின் தூதராக நியமிக்காமல் சென்னையை சேர்ந்த சமந்தாவை நியமித்தது தவறு சமந்தாவிற்கு எதிராக எதிர் கட்சிகள் போர்கொடி தூக்கியுள்ளனர்.