பாறாங்கல் மீது பஞ்சு மெத்தை போல் படுத்து கிடக்கும் சமந்தா - அடுத்த ஜென்மத்தில் நாக சைதன்யாவா பிறக்கணும்

செவ்வாய், 13 அக்டோபர் 2020 (11:21 IST)
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா, கடந்த ஆண்டு அக்டோபர் 6ம் தேதி தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் விண்ணைத்தாண்டி வருவாயா தெலுங்கு ரீமேக்கான ஏ மாய சேஸாவே ஷூட்டிங் முதலே காதலித்து வந்தனர்.

இந்நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவினால் 24 மணிநேரமும் வீட்டில் தங்கியிருக்கும் பிரபலங்கள் தங்களுக்கு போர் அடிக்காமல் இருக்க அவரவர் புத்தகங்கள் படிப்பது, சமைப்பது, கார்டனில் வேலை செய்வது, நடனமாடுவது, விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது என தங்களை பிஸியாக வைத்துள்ளனர்.அந்தவகையில் சமந்தா வீட்டில் இருந்தபடியே, சிறிய அளவிலான முட்டைகோஸை வளர்த்து அறுவடை செய்தார். அத்துடன் யோகா, ஒர்க் அவுட் என இந்த லாக்டவுனை உபயோகமாக பயன்படுத்தி வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது ஒர்க் அவுட் செய்து உடலை உருக்கி எடுத்து கிளாமரில் இறங்கிவிட்டார். ஆம், அம்மணி சிங்கிள் டாப் அணிந்துகொண்டு பாறாங்கல் மீது படுத்தபடி போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு ரசிகர்ளை ஏக்கத்தில் ஆழ்த்தியுள்ளார். இதற்கு சமந்தாவின் தீவிர ரசிகர் ஒருவர், அடுத்த ஜென்மம்'னு ஒன்னு இருந்தால் நாக சைதன்யாவாக பிறக்கவேண்டும் என கமெண்ட் அடித்துள்ளார். இப்படிலாம் போட்டோ போட்ட இதெல்லாம் நடக்கும்.
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்