சபாஷ் நாயுடு எடிட்டர் மாற்றத்துக்கான காரணம் இதுதானாம்

வியாழன், 28 ஜூலை 2016 (11:03 IST)
சபாஷ் நாயுடு படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் தொடர்ந்து மாற்றப்பட்டு வருகின்றனர்.


 
 
முதலில் இயக்குனர் டி.கே.ராஜீவ்குமாருக்கு உடல்நிலை சரியில்லாமல் போக, அவருக்குப் பதில் கமல் படத்தை  இயக்கினார். தற்போது எடிட்டர் ஜேம்ஸ் ஜோசப்பும் படத்திலிருந்து விலகியுள்ளார். ஒளிப்பதிவாளர் ஜெய  கிருஷ்ண கும்மாடியும் மாற்றப்பட்டுள்ளார்.
 
ஒளிப்பதிவாளரின் பணியில் கமலுக்கு திருப்தி இல்லாததால் அவரை மாற்றியுள்ளார். ஆனால், எடிட்டர்...?
 
எடிட்டர் ஜேம்ஸ் ஜோசப்பின் மனைவி கேரளாவில் விபத்தில் சிக்கிக் கொண்டதால் தொடர்ந்து சபாஷ் நாயுடுவில்  அவரால் பணியாற்ற முடியாத நிலை. அதன் காரணமாகவே அவர் படத்திலிருந்து விலகியுள்ளார்.
 
இவர்கள் இடத்தை யார் நிரப்பப் போகிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்