ரஷ்ய அதிபர் மாளிகையில் எஸ்.பி.பி இசை நிகழ்ச்சி

வெள்ளி, 28 அக்டோபர் 2016 (17:14 IST)
ரஷ்யாவின் நடைப்பெற உள்ள தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சியில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இசை நிகழ்ச்சி நடத்தவுள்ளார்.


 

 
ரஷ்ய நாட்டின் தலைநகரம் மாஸ்கோவில் அந்நாட்டு அதிபர் மாளிகையில் வரும் நவம்பர் மாதம் 6ஆம் தேதி அந்நாட்டில் வாழும் இந்தியர்கள் சார்பில் தீபவளி விழா சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.
 
இந்த விழாவில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பங்கேற்று இன்னிசை நிகழ்ச்சி நடத்தவுள்ளார். பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் படவா கோபி மற்றும் அவரது நண்பர் விஜயகுமார் ஆகியோர் இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளனர்.
 
மறைந்த எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மையாருக்கு பின்னர் ரஷ்ய அதிபர் மாளிகையில் இசைநிகழ்ச்சி நடத்தும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமை எஸ்.பி.பி.க்கு கிடைத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்