பாகுபலிக்கு பலியான ருத்ரம்மாதேவி

திங்கள், 29 ஜூன் 2015 (09:22 IST)
பிரமாண்டமாக 3டி யில் தயாராகியிருக்கும் சரித்திர படம், ருத்ரம்மாதேவி. இந்தப் படத்தை குறித்துதான் தெலுங்குப் படவுலகம் பேசிக் கொண்டிருந்திருக்க வேண்டும். ஆனால், பாகுபலி வெளியாவதால் ருத்ரம்மாதேவியை யாரும் கண்டுகொள்ளவில்லை. பாகுபலியின் விளம்பர வெளிச்சத்துக்கு முன்னால் களப்பலியாகியிருக்கிறது ருத்ரம்மாதேவி.
குணசேகர் தயாரித்து இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவி குரல் தந்திருக்கிறார். இந்த செய்தி ருத்ரம்மாதேவிக்கு சின்ன பூஸ்ட் அளித்தது. ஆனால், அது போதவில்லை. 
 
குணசேகரின் ஒக்கடு படத்தின் மூலம்தான் மகேஷ்பாபு ஸ்டார் அந்தஸ்தை வலுவாக்கிக் கொண்டார். அதனால், மகேஷ்பாபுவிடம் ருத்ரம்மாதேவையை புரமோட் செய்ய உதவி கேட்கலாம் என நினைக்கிறார் குணசேகர்.
 
சொந்தப் படத்தின் புரமோஷனுக்கே வராதவர் மகேஷ்பாபு. அவர் எப்படி அடுத்தவர் படத்தை விளம்பரப்படுத்துவார்?
 
ருத்ரம்மாதேவிக்கு சனி உச்சத்தில்.

வெப்துனியாவைப் படிக்கவும்