’’ரூ. 1000 கோடி பட்ஜெட் ’’படங்களில் நடிக்கும் பாகுபலி ஹீரோ…சாதனையின் உச்சம் !!

சனி, 5 டிசம்பர் 2020 (16:52 IST)
இந்தியாவில் பாகுபலி சினிமாவுக்கு முன் பாகுபலி சினிமாவுகுப் பின் என பிரிக்குமளவுக்கு ஒரு பெரும் வசூல் புரட்சியை உண்டாக்கியது அப்படம்.

ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி-1 , 2 படங்களில்  ஹீரோவாக நடித்த பிரபாஸின் மார்க்கெட் அப்படங்களின் வெற்றிக்குப் பிறகு உச்சத்துக்குச் சென்றது.

இன்றையதேதியில் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் ( 1 படத்திற்கு ரூ. 100 கோடி) பெரும் ஒரே நடிகர் அவர்தான். தற்போது அவர் ராதே ஸ்யாம், சலார், ஆதிபுருஸ் மற்றும் நாக் அஷ்வின் ஆகிய நான்கு படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார். அவருக்கு இப்படங்களில் சம்பளம் மட்டுமே ரூ. 400 கோடி ஆகும்.

அதேசமயம் இந்த நான்கு படங்களின் பட்ஜெட் மதிப்பு ரூ. 1000 கோடியைத் தாண்டுகிறது.
எனவே இந்தியத் திரையுலகில் ஒரேநேரத்தில் ரூ.1000 கோடி பட்ஜெட்டில் நடித்துவரும் ஒரே நடிகர் பிரபாஸ்தான் என்று அவரை திறமை மற்றும்  வளர்ச்சியை வியந்து பார்க்கின்றனர் #prabhas #telugufilm #southindianactor.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்