13 வருடங்களுக்குப் பிறகு மலையாளத்தில் நடிக்கும் ரோஜா

வியாழன், 2 ஜூலை 2015 (12:51 IST)
நடிகை ரோஜா மலையாளத்தில் இதுவரை இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார். முதல் படத்தில் சுரேஷ் கோபியுடன், இரண்டாவதில் பிரபு மற்றும் ஜெயராமுடன். 2002 -இல் வெளிவந்த இந்தப் படத்தில் தமிழ்ப் பெண்ணாகவே ரோஜா நடித்திருந்தார்.
 

 
13 வருடங்களுக்குப் பிறகு ஜெய்சூர்யா நாயகனாக நடிக்கும் ஜமுனா பியாரி படத்தில் ரோஜா நடிக்கிறார். 
 
ஆந்திர அரசியலில் தீவிரமாக செயல்படும் நேரத்திலும் தொலைக்காட்சி, சினிமா என்று கலைத்துறையிலும் கவனம் செலுத்தி வருகிறார் ரோஜா. தமிழில் வருடத்துக்கு மூன்று படங்களாவது நடித்துவிடுகிறார். ஜமுனா பியாரியின் இயக்குனர் தாமஸ் செபஸ்டியான் அவரை அணுகிய போது மறுப்பில்லாமல் உடனே நடிக்க சம்மதித்திருக்கிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்