மும்பையில் நடக்கும் எந்திரன் 2 வேலைகள்

சனி, 31 அக்டோபர் 2015 (13:13 IST)
கபாலி படப்பிடிப்பு மலேசியாவில் நடந்து கொண்டிருக்கும் வேளையில் மும்பையில் எந்திரன் 2 படத்துக்கான வேலைகள் நடந்து வருகின்றன.


 
 
எந்திரன் 2 படத்தை ஷங்கர் எந்திரனைவிட பிரமாண்டமாக எடுக்கயிருக்கிறார். லைகா, ஐங்கரன் இணைந்து படத்தை தயாரிக்கின்றன. 3டி யில் படத்தை எடுக்க முடிவு செய்துள்ளார் ஷங்கர். படத்துக்கு ஒளிப்பதிவு, நீரவ் ஷா.
 
3டி யில் படத்தை எடுப்பதால் முன்தயாரிப்பு அதிகம் செய்ய வேண்டியுள்ளது. அதற்காக நீரவ் ஷா உள்ளிட்ட கேமரா டீம் மும்பையில் முகாமிட்டுள்ளது. மூன்று தினங்கள் அவர்கள் மும்பையில் இருந்து கேமரா தொடர்பான முன்தயாரிப்பில் ஈடுபடுவார்கள் என படக்குழு தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்