சிறையில் கைதிகளுக்கு யோகா வகுப்பெடுத்த ரியா – வழக்கறிஞர் விளக்கம்!

வியாழன், 8 அக்டோபர் 2020 (16:20 IST)
நடிகர் சுஷாந்த் மரண வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியாகியுள்ள நிலையில் அவர் சிறையில் கைதிகளுக்கு யோகா வகுப்பெடுத்ததாக அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் மாதம் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் அவரது காதலி ரியா கைது செய்யப்பட்டுள்ளார். ரியா சுஷாந்திற்கு போதை பொருட்கள் வழங்கியதாக தொடரப்பட்ட விசாரணையில் மேலும் பல பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குனர்களுக்கு தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது சம்மந்தமான வழக்கை இப்போது சிபிஐ விசாரித்து வருகிறது. ரியா சக்ரபோர்த்திக்கு அளிக்கப்பட்ட நீதிமன்றக் காவல் இன்றோடு முடியும் நிலையில் மேலும் அவரது காவலை இம்மாதம் 20 ஆம் தேதி வரை நீட்டித்தனர். ஆனால் மும்பை நீதிமன்றம் அவரின் ஜாமீன் மனுவை ஏற்று ஜாமீன் வழங்கியது. கடந்த செப்டம்பர் 9-ம் தேதி கைது செய்யப்பட்ட அவர் 28 நாள்களுக்குப் நேற்று விடுதலையானார்.

இந்நிலையில் ரியாவின் வழக்கறிஞர் ‘சிறையில் ரியா நேர்மறையாக நடந்துகொன்டார். சிறை உணவுகளையே சாப்பிட்டார். சிறையில் கைதிகளுக்கு யோகா வகுப்பெடித்தார். அவர் ஒரு போர்வீரனைப் போல’ எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்