பல படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சுரேஷ் மேனனும், ரேவதியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பிறகு ரேவதி நடிப்பில் புதிய முகம் என்ற படத்தை சுரேஷ் மேனன் தயாரித்து இயக்கி நடித்தார். பாசமலர்கள் என்ற படமும் அவரது இயக்கத்தில் வெளிவந்தது.
10 வருடங்களுக்கு முன் ரேவதியும், சுரேஷ் மேனனும் விவாகரத்து செய்து கொண்டனர். அதன் பிறகு சினிமாவிலிருந்து முற்றிலும் விலகியிருந்த சுரேஷ் மேனனை தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடிக்க அழைத்து வந்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.