கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘முடிஞ்சா இவன புடி’. கன்னட நடிகர் கிச்சா சுதீப் மற்றும் நித்யாமேனன் ஆகியோர் நடித்துள்ள இப்படம் நாளை முதல் வெளியாகவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தை வெளியிடுவதற்கு, ‘லிங்கா’ படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
லிங்கா படத்தின் தோல்வியால் தங்களுக்கு சேரவேண்டிய தொகையை செலுத்தினால்தான் படத்தை ரிலீஸ் செய்வோம் என போர்க்கொடி தூக்கினர். அதனால், ‘முடிஞ்சா இவன புடி’ வெங்கடேஷின் சொந்தப்படம் என்ற தோற்றம் ஏற்பட, 'லிங்கா' விநியோகஸ்தர்கள் பணம் கேட்டு வந்தனர். இதனையடுத்து பணத்திற்கான செட்டில்மென்ட் முடிவடைந்து விட்டது.