அச்சம் என்பது மடமையடாவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். முதலில், தள்ளிப் போகாதே என்ற தனிப்பாடலை வெளியிட்டனர். அப்பாடல் இந்த வருடத்தின் மிகப்பெரிய ஹிட்டாக இளையஞர்கள் மனதில் இடம்பிடித்தது. அடுத்து ராசாளி என்ற பாடலை வெளியிட்டனர். அதையும் இளைஞர்கள் விரும்பி கேட்டு வருகின்றனர். முக்கியமாக, ரஹ்மான் இதற்கு முன் இசையமைத்த 24 படப்பாடல்களைவிட இவ்விரண்டு பாடல்களும் சிறப்பானவை.