ஆனால் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட பின் தெலுங்கு அமைப்புகள் படத்துக்கு எதிராக போராட்டத்தில் இறங்கின. கிருஷ்ணதேவராயரையும், தெனாலிராமனையும் இழிவுப்படுத்தி காட்சிகள் வைத்துள்ளனர். படம் வெளியானால் அது தெலுங்கு பேசும் மக்களை வேதனைப்படுத்தும் என்று கூறி படத்தை தடை செய்ய மனு அளித்தனர். வழக்கும் தொடரப்பட்டது. மேலும், வடிவேலுவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவும் முயன்றனர்.
இந்த விவகாரத்தில் வடிவேலுக்கு ஆதரவாக சீமான், வ.கௌதமன், பாரதிராஜா உள்ளிட்டோர் அறிக்கை வெளியிட்டனர். தெலுங்கு அமைப்புகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் எச்சரித்தனர். இந்நிலையில் தெனாலிராமனில் வரலாறை திரித்து எடுத்துள்ளனர் என்ற வாதத்துடன், படத்தை தடை செய்ய கோரிய மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.