சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சூர்யா, அறிக்கை வெளியிட்ட அன்றே அதனை செய்திருக்க வேண்டாம் என்று தோன்றியதாகவும், தனது பக்கம் இருக்கும் தவறை சரி செய்ய முயல்வதாகவும் கூறினார்.
சூர்யா, கௌதமிடையே இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் பஞ்சாயத்து பேசியிருக்கிறார். நல்ல செய்தி என்னவென்றால், மீண்டும் இவர்கள் இணைந்து ஒரு படம் செய்கிறார்கள்.