2016ஆம் ஆண்டு வெளியான தெலுங்குப் படம் ‘த்ருவா’. ராம் சரண், அரவிந்த் சாமி இருவரும் இணைந்து நடித்திருந்தனர். இவர்கள் இருவரும் மறுபடியும் சேர்ந்து நடிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை, மணிரத்னம் இயக்க உள்ளார்.
தற்போது ‘காற்று வெளியிடை’ படத்தின் ரிலீஸ் வேலைகளில் ஈடுபட்டுள்ள மணிரத்னம், அந்தப் படத்தின் ரிலீஸுக்குப் பிறகு, ஆகஸ்ட் மாதத்தில் இந்தப் படத்தின் வேலைகளை ஆரம்பிக்கலாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஆக்ஷன் படமாக இது உருவாக இருக்கிறது.