வரிசையாக புது இயக்குனர்களுக்கு வாய்ப்பளிக்கும் சிவகார்த்திகேயன்… இதுதான் காரணமா?

செவ்வாய், 19 ஜூலை 2022 (14:55 IST)
நடிகர் சிவகார்த்திகேயனின் கடைசி மூன்று படங்களை புதுமுக இயக்குனர்கள் அல்லது இரண்டாவது பட இயக்குனர்களே இயக்கியுள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு படத்தை முடித்த பின்னரே அடுத்த படத்தை ஆரம்பித்து வந்த நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது ஒன்றுக்கும் மேற்பட்ட படங்களில் வரிசையாக நடிக்க ஆரம்பித்துள்ளார்.  அதுமட்டும் இல்லாமல் முன்னர் முன்னணி இயக்குனர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்கள் படத்தில் இருக்க வேண்டும் என ஆசைப்பட்ட அவர் இப்போது முதல் பட அல்லது இரண்டாம் பட இயக்குனர்களுக்கு வாய்ப்பளிக்கிறார்.

சமீபத்தில் டான் படத்தை ரிலீஸ் செய்துள்ள அவர் அடுத்து பிரின்ஸ் படத்தில் நடித்து வருகிறார். இந்த இரு படங்களின் இயக்குனர்களும் ரசிகர்களுக்கு பெரிய அளவில் தெரிந்த இயக்குனர்கள் இல்லை. இதையடுத்து தற்போது மண்டேலா புகழ் மடோன் அஸ்வின் இயக்கும் புதிய படமான ‘மாவீரன்’ படத்தில் நடிக்கிறார்.

இப்படி வரிசையாக இளம் இயக்குனர்கள் இயக்கத்தில் நடிப்பதற்குப் பின்னால் ஒரு காரணம் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் சமீபகாலமாக அவர் நடிக்கும் படங்களை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் அவரே தயாரிக்கிறார். இதனால் புதுமுக இயக்குனர்களை வைத்து எடுத்தால் கணிசமான தொகையை சேமிக்க முடியும் என்பதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்