ஷங்கர் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக ஒப்பந்தம் ஆன ராஷ்மிகா!

புதன், 21 ஜூலை 2021 (16:39 IST)
ஷங்கர் மற்றும் ராம் சரண் தேஜா இணையும் படத்தில் ஏற்கனவே கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்துள்ள நிலையில் இப்போது ராஷ்மிகா மந்தனாவும் ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அந்த படத்தை கைவிட்டுவிட்டு தற்போது ராம்சரண் தேஜா நடித்த உள்ள தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் தில் ராஜு தயாரிக்க உள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக கியாரா அத்வானி சில வாரங்களுக்கு முன்னர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்நிலையில் இப்போது மற்றொரு கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ராம் சரண் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்