கபாலி திரைப்படத்தில் அம்பேத்கர், கார்ல் மார்க்ஸ், விவேகானந்தர் போன்ற பல அரசியல் தலைவர்களின் படங்களும், சார்லி சாப்ளின், பாப் மார்லே போன்ற கலை ஆளுமைகளின் புகைப்படங்களும் பயன்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், தந்தை பெரியாரின் படம் இடம் பெறவில்லை.
அதற்கு பதிலளித்த ரஞ்சித், “பெரியார் எனக்கு ரொம்ப பிடிச்ச தலைவர். அவரை நான் தவிர்த்திருந்தால் இந்த இடத்துக்கு வந்திருக்கவே முடியாது. ‘சாதியை மற... மனிதனை நினை’ என்பது பெரியார் சொன்ன முக்கியமான ஸ்டேட்மெண்ட்.