புதிய படங்களுக்கு மவுசு இல்லை... பாட்ஷாவுக்கு முன்னுரிமை தரும் திரையரங்குகள்

வியாழன், 2 மார்ச் 2017 (17:51 IST)
நாளை மார்ச் 3, குற்றம் 23, முப்பரிமாணம், யாக்கை உள்ளிட்ட படங்கள் வெளியாகின்றன. ஆனால், இந்தப் படங்களைவிட மெருகூட்டப்பட்டு வெளியாகும் ரஜினியின் பாட்ஷாவை திரையிடவே திரையரங்குகள் ஆர்வம் காட்டுகின்றன.


 

தமிழில் வெளியாகும் முன்னணி நடிகர்கள் அல்லாத படங்கள் மிகக்குறைவாகவே வசூலிக்கின்றன. இதனால் திரையரங்குகள் நஷ்டத்தையே சந்திக்கின்றன.

இந்நிலையில், பாட்ஷா படத்தை மெருகூட்டி 5.1 ஒலி வடிவத்தில் மார்ச் 3-ம் தேதி வெளியிடுகின்றனர். பாட்ஷா படத்தைத் தயாரித்த சத்யா மூவிஸ் நிறுவனம், தங்களுடைய நிறுவனம் தொடங்கி 50 ஆண்டுகள் ஆவதால் மீண்டும் இப்படத்தை வெளியிடுகிறது. பின்னணி இசையை மட்டும் தற்போதுள்ள கருவிகளை வைத்து புதிதாக உருவாக்கி சேர்த்துள்ளார் இசையமைப்பாளர் தேவா. 

புதிய படங்கள் வெளியானாலும் திரையரங்குகள் பாட்ஷாவை வெளியிடவே அதிக ஆர்வம் காட்டுகின்றன.

 

வெப்துனியாவைப் படிக்கவும்