லிங்கா படப்பிடிப்பில் பிஸியாக இருந்த ரஜினி சூரியநாராயண பாபுவை திடீரென சந்தித்தது ஆந்திர படவுலகில் பரபரப்பாக பேசப்பட்டது. அந்த சந்திப்பு குறித்து பேசிய சூரியநாராயண பாபு, தான் தயாரிக்கும் தெலுங்குப் படத்தில் மகேஷ் பாபுவுடன் நடிக்க ரஜினி ஒப்புக் கொண்டதாக தெரிவித்தார். இவர் ரஜினியின் ஆரம்ப காலத்தில் ரஜினி நடித்த தெலுங்கு, இந்தி, தமிழ்ப் படங்களை தயாரித்துள்ளார்.