ரஜினி தனிக்கட்சி தொடங்குவதாக செய்தி – சகோதரர் மறுப்பு

சனி, 27 மே 2017 (18:18 IST)
‘ரஜினி தொடங்குவதாக நான் சொல்லவில்லை’ என ரஜினியின் சகோதரரான சத்ய நாராயணராவ் மறுத்துள்ளார்.


 


 
ரசிகர்களை ரஜினி சந்தித்ததில் இருந்தே, அவர் அரசியலில் குதிக்கத் தயாராகிவிட்டார் என்ற ரீதியில் செய்திகள் உலாவந்து கொண்டிருக்கின்றன. ஆளுக்கு ஆள் இதைப்பற்றி கருத்து கூறிவருகின்றனர். அவர் வராவிட்டால், இவர்களே கையைப் பிடித்து இழுத்துக் கொண்டாந்து விட்டுவிடுவார்கள் போல.
 
இந்நிலையில், ஜூலையில் ரஜினி புதுக்கட்சி தொடங்க இருப்பதாகவும், கொடி உள்ளிட்டவற்றை டிசைன் செய்யும் வேலைகள் நடந்து வருவதாகவும், இன்று காலை ரஜினியின் சகோதரரான சத்ய நாராயணராவ் சொன்னதாக செய்திகள் வெளியாகின. ஆனால், தான் அவ்வாறு எங்கும் சொல்லவில்லை என்று மறுத்துள்ள அவர், தவறான செய்தியை யாரோ பரப்பி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்