நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் இணைந்து வெளியிட்ட ’பீப்’ பாடல் தமிழக மக்களிடையேயும், பெண்களிடையேயும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை, புதுகை, கோவை, சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதிலும் இருவருக்கும் எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அனிருத் மீது ரஜினிகாந்த் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பே ஆண்டரியாவுடன் முத்தமிடுவது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் பரவியது. அப்போது அனிருத்தை அழைத்த ரஜினி, நீ சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. தேவையில்லாத விசயங்களில் ஈடுபடாமல் பார்த்து நடந்துக் கொள் என்று அறிவுறை கூறினார்.
ஆனாலும் அதனை கண்டுகொள்ளாத அனிருத் தற்போது பீப் பாடலை வெளியிட்டுள்ளார். இதனால் கடும் கோபம் அடைந்த ரஜினி, தனது குடும்பத்தாரிடம் இனி அனிருத்துடன் இணைந்து பணியாற்றக் கூடாது, அவனுடன் இனி எந்த தொடர்பும் வேண்டாம் என்று கூறிவிட்டாராம். மேலும் தனது பெயரை அனிருத் குடும்பத்தார் எங்கும் பயன்படுத்தக் கூடாது என்றும் கூறியதாக தெரிகிறது.